27 in Thiruvananthapuram

Tamil News

H-1B விசா கட்டண உயர்வு.. லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிக்கொட்டிய டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவைதான் வைத்திருக்கிறார்கள். இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் தற்போது உயர்த்தியிருக்கிறார். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும், புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும். H-1B விசா என்பது தற்காலிக அமெரிக்கா வேலை விசா ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த விசா முறை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்...

இந்தியா மீதான பரஸ்பர வரியை ரத்து செய்யும் அமெரிக்கா.. மொத்த வரியும் 15% குறையுமாம்! முக்கிய தகவல்

டெல்லி: இப்போது இந்தியா மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தியா மீதான வரியை அமெரிக்கா சீக்கிரமே ரத்து செய்யலாம் என்றும் ஒட்டுமொத்த வரி 15%ஆக குறைக்கப்படலாம் என்றும் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அப்படித் தான் இந்தியா மீது அவர்...

பவன் கல்யாண் இப்படி எல்லாம் பண்ணது இல்லையே.. உடனே இந்த 8 விஷயத்தை விஜய் செய்யணும்.. இல்லைன்னா சிக்கல்

‏சென்னை: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். சமீப காலங்களில் இந்திய அரசியலில் ஒரே வெற்றிகரமான நடிகர் என்றால் அது பவன் கல்யாண் மட்டும்தான். கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்கள் அரசியலில் தங்கள் உயரத்தை அடைய முடியவில்லை. இப்போது நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் மூலம் விஜய் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலில் சில தவறுகளையும் செய்து வருகிறார்....

வக்பு சட்டத்திருத்த பிரிவுகளுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள்,...

ஒரே ஒரு ஹேஷ்டேக்.. ஒட்டுமொத்தமாய் மாறிய தலையெழுத்து! இயக்குனர் ஷங்கர் சொன்னதை செய்து காட்டிய GEN

‍சென்னை: திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் ஒரே ஒரு #ஹேஷ்டேக் மூலம் புரட்சி ஏற்படும் எனக் கூறியிருந்ததை கடுமையாக ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள். ஆனால் அதேபோல ஒரு ஹேஷ்டேக்கை வைத்து நேபாளத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்வியில் ஊழல், கருப்பு பண ஒழிப்பு, என ஷங்கர் சொன்னதெல்லாம் பிறகு நடந்திருக்கிறது என அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர்...

பீகாரில் ஒரு வார்த்தை மோடி பேசலயே? ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாகவும் கூறி, இதற்கு எதிரான போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளார்.. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் உரிமை யாத்திரை என்று பெயரில் பீகாரில் துவங்கியிருக்கிறார்.. இந்த யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் பாஜகவுடன்...

சென்னையில் சில நாளிலேயே 2.2 கோடி சம்பாதித்த வங்கி மேலாளர்.. தங்கத்தை அடகு வைத்தவர்களுக்கு ட்விஸ்ட்

சென்னை: சென்னை தங்கச்சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்யும் பணியை உயர் அதிகாரிகள் நடத்தினார்கள். அதில் 21 பேருக்கு தங்க நகைகள் பெயரில் கடன் வழங்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதன்படி வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.5 கோடியை வங்கி மேலாளர் சுருட்டியது தெரியவந்தது. இந்த மோசடிக்கு துணை போன நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். இவர்கள் எப்படி சிக்கினார்கள்...

பாலியல் வழக்கில் குற்றவாளி.. தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு என்ன தண்டனை? இன்று அறிவிப்பு

பெங்களூர்: பணிப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் வேரண்ணா குற்றவாளி என்று நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் இன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்ற தண்டனை விவரங்களை (Prajwal Revanna sentence details) சிறப்பு கோர்ட் அறிவிக்கிறது முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னாள் எம்பியுமானவர் பிரஜ்வல்...

CWC: கமல்ஹாசனிடம் காதலை சொல்ல சென்றேனா? இதெல்லாம் நியாயமே இல்லை! கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனிடம் நான் காதலை சொன்ன சென்றேனா? இதை தவறாக புரிந்து கொண்டு செய்தியாக பரப்புவது நியாயமே இல்லை என்றும் நாகரீகமற்றது என்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளியில் கமல்ஹாசன் குறித்து லட்சுமி கூறிய கருத்து வைரலான நிலையில் அவர் தற்போது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா...

டெல்லியில் டிக் அடிக்கப்பட்ட பெயர்? தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்? அமித் ஷா எடுத்த லிஸ்ட்!

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிந்துவிட்டது. அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன ‎ ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021...