28 in Thiruvananthapuram

Tamil News

CWC: கமல்ஹாசனிடம் காதலை சொல்ல சென்றேனா? இதெல்லாம் நியாயமே இல்லை! கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனிடம் நான் காதலை சொன்ன சென்றேனா? இதை தவறாக புரிந்து கொண்டு செய்தியாக பரப்புவது நியாயமே இல்லை என்றும் நாகரீகமற்றது என்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளியில் கமல்ஹாசன் குறித்து லட்சுமி கூறிய கருத்து வைரலான நிலையில் அவர் தற்போது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா...

டெல்லியில் டிக் அடிக்கப்பட்ட பெயர்? தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்? அமித் ஷா எடுத்த லிஸ்ட்!

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிந்துவிட்டது. அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன ‎ ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021...

ஆபரேஷன் சிந்தூர்..திலகத்தை அழித்தவர்களை அழித்த ஆர்மி! ராணுவத்துடன் நிற்கும் தமிழகம்..ஸ்டாலின் உறுதி

சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் இந்திய ராணுவத்துடன் நிற்கிறது எனக் கூறியுள்ளார் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது...

மாதம் 58,000 சம்பளத்தில் சென்னை ஹைகோர்ட்டில் வேலை.. 392 பணியிடங்கள்..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: சென்னை ஹைகோர்ட் உள்பட தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். அலுவலக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட...

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி? அகவிலைப்படி உயர்கிறதா.. புத்தாண்டு குட்நியூஸ் தருகிறாரா தமிழக முதல்வர்?

சென்னை: அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசு ஊழியர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.. இதற்காக பல்வேறு போராட்டங்களையும்...

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் ஸ்ரீ.. 37 வயதிலேயே இப்படி ஒரு நிலைமையா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பொதுவாக திரைப்படங்கள், சீரியலில் நடித்த ஒரு சிலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறி விடுகிறார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் விடுகிறார்கள். அவர்களை பார்த்ததும் இவர்களா அவர்கள் என்று ரசிகர்களே குழப்பம் அடைகிறார்கள். அதுபோலத்தான் நடிகர்...

இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்.. பேஸ்புக்கில் இன்று மிஸ் பண்ணிடாதீங்க

தேனி: தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி என்று சொல்லும் அளவிற்கு அங்கு தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி அங்கு புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதன்படி பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் புதன்கிழமை அன்று குறைதீர் முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் இடுக்கி மாவட்ட கலெக்டராக இருக்கும் விக்னேஷ்வரி,...

படிப்பு தான் முக்கியம்..இறந்த தாயைக் கூட பார்க்காமல் பரிட்சை எழுத சென்ற மகன்! கண்ணீர் மல்க கோரிக்கை!

தேனி: மனநலம் பாதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையிலும், தாயின் உடலை பார்க்க கூட வராமல் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன், தேர்வு எழுதி முடித்து விட்டு வந்து தாயின் உடலை மருத்துவமனையில் இருந்து அடக்கம் செய்ய பெற்று கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் இழந்து...

மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறு.. கைவிடகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இது தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர்...

தேம்பி தேம்பி அழும் முகேஷ் அம்பானி.. பங்குகள் சரிவு, அரசின் நோட்டீஸ், சொத்து மதிப்பு சரிவு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் (ஆல்பா) லிமிடெட் மற்றும் NIKO (NECO) லிமிடெட் ஆகியவற்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 0.80 சதவீதம் சரிந்து 1161.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 23.38 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் ரிலையன்ஸ் பங்குகள்...