சென்னை: தைப்பூசத் திருநாளில் தமிழ் கடவுள் முருகனை போற்றுவோம் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!
தைப்பூசத் திருவிழா இன்று உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வருவதுதான் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் வேண்டியதை வேண்டியபடியே கொடுப்பவன் முருகன்.
இந்த நாளில் குழந்தையின்மை, திருமணத் தடை, கடன் தொல்லை தீர, குழந்தைகளின் கல்வி, தீராத நோய் உள்ளிட்டவைகளுக்காக வேண்டிக் கொண்டால் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நன்னாளை போற்றுவோம் என விஜய் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.