31 in Thiruvananthapuram

chennai

மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறு.. கைவிடகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இது தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர்...

தேம்பி தேம்பி அழும் முகேஷ் அம்பானி.. பங்குகள் சரிவு, அரசின் நோட்டீஸ், சொத்து மதிப்பு சரிவு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் (ஆல்பா) லிமிடெட் மற்றும் NIKO (NECO) லிமிடெட் ஆகியவற்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 0.80 சதவீதம் சரிந்து 1161.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 23.38 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் ரிலையன்ஸ் பங்குகள்...

உதயநிதிக்கு பயம்.. கேரவனில் ஒத்திகை பார்த்த விஜய் – ஆதவ் அர்ஜுனா.. கசிந்த தகவலால்.. சிவந்த திமுக

சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர். இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும்...

தடிக்கும் வார்த்தை.. வலுக்கும் மோதல்! நாம் தமிழரை விடாத வருண்குமார்! நேராக உள்துறைக்கே பறந்த புகார்!

சென்னை: சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்பி அருண்குமார் பேசிய பேச்சு, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மோதல் விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் வலுத்திருக்குகிறது. இதற்கிடையே எஸ்பி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின்...

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருத்தம் செய்துட்டீங்களா? இதுதான் கடைசி தேதி …

சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. இதை வாய்ப்பினை பயன்படுத்தி, ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச்...

டமில்நடு வேண்டாம்! TAMILNADU ஆங்கில வார்த்தையில் ழ எழுத்தை சேர்க்கணும்! மதுரை கோர்ட்டில் பரபரப்பு!

மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார், இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக ழ எனும் எழுத்து உள்ளது. ஆனால் அரசாணைகளில் STATE GOVERNMENT OF...

கொருக்குப்பேட்டையில் கோளாறு கொடுத்த எக்ஸ்பிரஸ்! சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக இடையில் நின்றதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. எண்ணூரிலிருந்து சென்னைக்குள் வரும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையும் இதனால் பாதிக்கப்பட்டன. ஏற்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட இந்த ரயில், எண்ணூரில் உள்ள யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் திடீரென பழுதாகியது. இதனால், ரயில்...

വീണ്ടും ട്രെയിന്‍ അപകടം, എഞ്ചിനും കോച്ചുകളും വേര്‍പെട്ട് ഓടിയത് 500 മീറ്റര്‍..! ആളപായമില്ല

ചെന്നൈ: ദിബ്രുഗഡ് – കന്യാകുമാരി വിവേക് എക്സ്പ്രസിന്റെ കോച്ചുകളില്‍ നിന്ന് എഞ്ചിന്‍ വേര്‍പ്പെട്ടു. ഇന്ന് രാവിലെ ഒമ്പത് മണിയോടെയാണ് സംഭവം. അപകടത്തില്‍ ആര്‍ക്കും പരിക്കേറ്റിട്ടില്ല എന്ന് റെയില്‍വേ അധികൃതര്‍ അറിയിച്ചു. വെല്ലൂരിലെ കാട്പാഡിക്ക് സമീപമുള്ള തിരുവളം റെയില്‍വേ സ്റ്റേഷന് സമീപത്ത് വെച്ചായിരുന്നു അപകടം. 22 കോച്ചുകളുള്ള ട്രെയിനിന്റെ എഞ്ചിനാണ് വേര്‍പെട്ടത്. ചെന്നൈ സെന്‍ട്രല്‍ റെയില്‍വേ സ്റ്റേഷനില്‍ നിന്ന് തിരുവലത്ത് നിന്ന് 30 കിലോമീറ്റര്‍ അകലെയുള്ള കാട്പാടി റെയില്‍വേ സ്റ്റേഷനിലേക്ക് പോകുകയായിരുന്നു ട്രെയിന്‍. 500 മീറ്ററോളം ദൂരം എഞ്ചിനും...