சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர்.
இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தின. இந்த அதிர்வுகள் இன்னமும் நீடித்தபடி இருக்கின்றன. திமுக தலைமைக்கு ஏற்பட்ட கோபம், ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வைத்திருக்கிறத
இந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தி தற்போது சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நூல் வெளியீட்டு விழா, மாலை 5 மணிக்கு தொடங்கும் என சிறப்பு அழைப்பிதழில் (வி.ஐ.பி. பாஸ்) சொல்லப்பட்டி ருந்தாலும் மாலை 6 மணிக்குத் தான் நிகழ்ச்சித் தொடங்கியது. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் விஜய். மற்ற விருந்தினர்களும் வந்துவிட்டனர். விஜய் தவிர்த்த மற்ற விருந்தினர்கள், ஸ்டேஜ்ஜுக்கு பின்புறமிருந்த ஓய்வு அறையில் காத்திருந்தனர்.
அதேசமயம், விஜய் மட்டும் கேரவனில் இருந்தார். அவருக்காக, தனி கேரவன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஆதவ் அர்ஜுனா. அந்த கேரவனில், விஜய்யும் ஆதவ்வும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். விழாவை திருமா தவிர்த்த விசயம் பிரதானமாக அவர்களின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. அப்போது, இந்த நிகழ்ச்சியை திருமா தவிர்த்துள்ளதன் பின்னணியை ஏற்கனவே விஜய்யிடம் ஆதவ் சொல்லியிருந்தாலும் மீண்டும் அதே பின்னணியை சொல்லியிருக்கிறார் ஆதவ்.
உங்களை கண்டு பயப்படுகிறார் உதயநிதி. நீங்களும் நாங்களும் (சிறுத்தைகள்) இந்த விழா மூலம் ஒன்றாக சேர்ந்துவிடுவோமோ என்கிற பயம். அதான் அவர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது. கட்சியில் கட்சிக்காக உழைச்சு பதவி கிடைச்சிருந்தா உதயநிதிக்கு பயம் வந்திருக்காது. நேரடியாக உயர்ந்த பதவி கிடைக்கும் போதுதான், எதிரிகளை பார்த்தால் பயம் வரும்.