வாஷிங்டன்: 2019ல் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். அப்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தத. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை வீழ்த்தும் வகையில் அவர்களின் பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பணியை அமெரிக்க ஏஜென்சி செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரி மைக் பென்ஸ் பரபரப்பான கதவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை...
சென்னை: தைப்பூசத் திருநாளில் தமிழ் கடவுள் முருகனை போற்றுவோம் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தைப்பூசத் திருவிழா இன்று உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வருவதுதான் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் வேண்டியதை வேண்டியபடியே...
சென்னை: அக்டோபர் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியான மலையாளப்படமான போகன்வில்லா சமீபத்தில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்ட சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு பலரும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிர்மயியை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்துக் கொண்டே அட தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நம்ம நாய் சேகர் வடிவேலுவின் அழகில் மயங்கி விழுந்தவரா இவர் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே என சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். ...
சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர். இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும்...
சென்னை: சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்பி அருண்குமார் பேசிய பேச்சு, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மோதல் விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் வலுத்திருக்குகிறது. இதற்கிடையே எஸ்பி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின்...
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்… அத்துடன்., குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக்கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது… குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு வீட்டில் இருந்த 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது....
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. இதை வாய்ப்பினை பயன்படுத்தி, ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச்...
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக இடையில் நின்றதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. எண்ணூரிலிருந்து சென்னைக்குள் வரும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையும் இதனால் பாதிக்கப்பட்டன. ஏற்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட இந்த ரயில், எண்ணூரில் உள்ள யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் திடீரென பழுதாகியது. இதனால், ரயில்...
சென்னை: எனது மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது என துரை வைகோ விளக்கமளித்துள்ளார். திராவிட இயக்கத்தை பின்பற்றும் வைகோ பேத்தியின் திருமண அழைப்பிதழில் குலம், கோத்திரத்துடன் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணனுக்கும் கடந்த 7ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான...