27 in Thiruvananthapuram

‛‛மோடியால் தான் முடியும்’’.. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துங்க! டெல்லி ஜமா மசூதி இமாம் கூறிய வார்த்தை

10 months ago
TV Next
97

டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.


மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 200க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். மேலும் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.

போர் தொடங்கிவிட்டதாக கூறிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விமானப்படை மூலம் காசாவில் தாக்குதல் நடத்தினார். தற்போது காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த போரில் தற்போது வரை காசாவில் 21,300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் காசாவில் ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் தான் காசா மீதான இஸ்ரேலின் போரை பிரதமர் மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் தவறிவிட்டது.


இந்நிலையில் தான் காசா மீதான இஸ்ரேலின் போரை பிரதமர் மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் தவறிவிட்டது.

Leave a Reply