25 in Thiruvananthapuram

சர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா.. அயோத்தி ராமர் கோவில் வீடியோவால் கடும் எதிர்ப்பு.. என்னாச்சு?

9 months ago
TV Next
102

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாகவும், ராம மந்திரத்தை உச்சரிக்க கூறியும் வீடியோ வெளியிட்ட பாடகி கேஎஸ் சித்ராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொடர்ந்து அவரை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விவகாரம் விவாதமாகி உள்ளது. அப்படி பாடகி கேஎஸ் சித்ரா தனது வீடியோவில் என்ன கூறினார்? வாங்க பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. இந்த பூஜைகள் 22ம் தேதி மாலை வரை நடைபெற உள்ளது. இதனால் அயோத்தி நகரமே தற்போது களைகட்டியுள்ளது.

இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பாடகி கேஎஸ் சித்ரா கடும் விமர்சன்ததை எதிர் கொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்பட பல மொழிப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி புகழ் பெற்றவர் கேஎஸ் சித்ரா. மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார். பாடல்கள் மூலம் காந்த குரலால் கவர்ந்து இழுத்த கேஎஸ் சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 தேசிய விருதுகள் வென்றுள்ளார். 36 திரைப்பட விருதுகளையும், பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார். மேலும் இவர் ‛தென்னகத்தின் நைட்டிங்கேல்’ எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியாகும் சிங்கர்ஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக அவர் செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாடகி கேஎஸ் சித்ராவின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‛‛ஜனவரி 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது அனைவரும் ராமர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ‘ஸ்ரீராம, ஜெயராம, ஜெய ராம’ என்ற மந்திரகத்தை கூற வேண்டும். அதேபோல் அனைவரும் வீட்டில் ஐந்து திரி தீபம் ஏற்ற வேண்டும். மேலும் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். லோக சமஸ்தா சுகினோ பவந்து” என தெரிவித்துள்ளார்.


அதேபோல் எழுத்தாளர் இந்து மேனன் தனது முகநூல் பக்கத்தில், ‛‛இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வலிகள், அவர்களின் ரத்தத்தின் மீது இருந்து மந்திரம் முழங்கினாலும் ராமனும் ராமனும், விஷ்ணுவும் வரப்போவது போவது இல்லை. 5 லட்சம் விளக்குகளை ஏற்றினாலும் உங்களினம் மனதில் ஒளி என்பது வராது. குரலின் காரணமாகவே நைட்டிங்கேல் என்று உலகம் நம்பியது. ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு ‘போலி நைட்டிங்கேல்’ என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply